ஆரம்பமானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவம்- புகைப்படங்கள் உள்ளே

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க  கொடியேற்றம் இடம்பெற்றது.

அந்தவகையில்  மகோற்சவ திருவிழாக்கள்  தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளதோடு எதிர்வரும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்தத்  திருவிழாவும்  இடம்பெற்று, அன்றைய தினம் மாலை கொடியிறக்க திருவிழாவும்  இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடியேற்ற திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அங்கப்பிரதட்சணம் உட்பட பல்வேறு நேர்த்திகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *