இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! samugammedia

திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேரும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கடந்த 07 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேரும் இன்று திருகோணமலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர்.

10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் குறித்த 10 இந்திய மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *