நல்லூர் மூத்த விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று!

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் இன்று(23)  காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. அந்தவகையில் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத்  தொடர்ந்து விநாயக பெருமான் வீதி வலம் வந்தார்.

இதனைத்  தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பிரதான கும்பங்கள் வீதி வலம் வந்து பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றது.

இக்கும்பாபிஷேக பெருவிழாவில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *