
யாழ்ப்பாணம், பெப்.18:
வடமாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகள், சமூக அமைப்புகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இது தொடர்வில் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிடுகையில்:
வடமாகாண ஆளுநர் செயலகத்திறகு வழங்கிய முறைப்பாடுகள் தொடர்பில்
வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் மத்தியில் குறித்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது.
சமைத்த உணவின் விலை, தொழில்முனைவோர், கூட்டுறவு சங்கங்களை ஊக்குவித்தல்,
பண்ணை விலை மற்றும் காய்கறிகளின் சில்லறை விலை, விவசாயிகளுக்கான செலவுகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அத்தியாவசிய உள்ளீடுகளின் செலவுகள், விவசாய சேவைகள் துறை, வட மாகாண விவசாய அமைச்சகத்தின் திட்டங்கள், படகுகள் பழுது, நிதியுதவி, நங்கூரம், குளிர்பதனம், தொழில், திட்டங்கள் ஆகியவை குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்பட்டும் என்றார்.





