மோட்டார்சைக்கிளுடன் மோதிய புகையிரதம்…! பெண் உயிரிழப்பு…!samugammedia

புகையிரத கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (20) மாலை சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியன்கேமுல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சீதுவ, லியன்கேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *