காசாவில் இடம்பெறும் மோதலும், யுக்ரைன் யுத்தமும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலும் ஒரு வருடத்துக்கு மேலாக நீடிக்கும் ரஷ்ய – யுக்ரைன் போரும் உலக பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது.
அத்துடன் இலங்கை எதிர்கொண்ட மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சித்து வரும் நிலையில் குறித்த இரண்டு யுத்தங்களும் அதில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.