ஹாமாஸிடம் பணையக் கைதியாக இருந்த இலங்கையர் உயிரிழப்பு! samugammedia

ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்  இலங்கையர் உயிரிழந்துள்ளதாக டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவின் கூற்றுப்படி,  சுஜித் பண்டார யட்டவர (48) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார  தெரிவித்துள்ளார்.

அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்திருந்த சடலம் அவரின் பிள்ளைகளின் டிஎன்ஏ மாதிரிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply