வட்டவளை பகுதியில் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்றே இன்று காலை வீதியை விட்டு விலகி 32 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில், பாரவூர்தியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.