யுத்த காலத்தில்கூட இல்லாத நிலை..! 2 வருடங்களில் 27,000 இராணுவத்தினர் விலகல்..! சபையில் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

27,000 இராணுவத்தினர் கடந்த இரண்டு வருடங்களில் சேவையிலிருந்து விலகியுள்ளதாக டலஸ் அழகப்பெரும இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் இங்கு பிரச்சினை இருப்பதாகவும் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்தில் கூட இவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை என நான் நம்புகிறேன்.

அரசியல்வாதிகளால் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு  துறையே பொலிஸ் துறை. 

பொதுமக்களின் பாதுகாப்பில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவநம்பிக்கை வெளிப்பட்டது. நாட்டில் மாதத்துக்கு  50 கொலைகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். 

Leave a Reply