யாழில் நல்லிணக்கத்திற்கான இளைஞர் ஒன்றிணைவு நிகழ்வு…!samugammedia

இன்றையதினம் நல்லிணக்கத்திற்கான இளைஞர் ஒன்றிணைவு நிகழ்வு ஒன்று கல்லூண்டாயில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தூர்ராஜா தலைமையில் நடைபெற்றது.

மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு இரண்டு நிமிட அக வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, வரவேற்பு நடனம், சிவதாண்டிய நடனம், விருந்தினர்களின் உரைகள் ஆகியன இடம்பெற்றன.

பின்னர் மொழிப் பிரச்சினை தொடர்பான அளிக்கை, இன மத சார் முக்கிய சட்டங்களின் தொகுப்பு ஆகியன தொடர்பான கருத்துரைகள் வழங்கப்பட்டன. பின்னர் அமைப்பின் நோக்கம் தொடர்பான அளிக்கை செய்யப்பட்டு நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

இந்நிகழ்வில் SOND நிறுவனத்தினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply