கொழும்பு வாழ் மக்களே அவதானம்…! 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு…!samugammedia

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 50 MOH பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

நவம்பரில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 68,884 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக 15,953 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 14,912 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் மொத்தமாக 4,672 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் கண்டி மாவட்டத்தில் 7,482 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *