ரணிலுக்கு கிடைத்த வெற்றி: மொட்டுவிலிருந்து வெளியேற தயாராகும் எம்.பிக்கள்..! வெளியான பரபரப்புத் தகவல்

 எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஏற்கனவே 42 அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா புதிய கூட்டணியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply