யாழில் நடைபெற்ற நடிகை ரம்பா மகனின் பிறந்ததின கொண்டாட்டம்…! வைரலாகும் போட்டோஸ்…!samugammedia

தென்னிந்திய நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் தம்பதியினரின் மகனின் 05 ஆவது பிறந்ததினத்தின கொண்டாட்டமானது நேற்றையதினம் யாழ் மானிப்பாய் சுதுமலையில் அமைந்துள்ள இல்லத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழில் ஒழுங்குபடுத்தப்பட்ட இசை நிகழ்வொன்றில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகை ரம்பா கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் காலநிலை சீரின்மை காரணமாக அந்த இசைநிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்கையில் ரம்பாவின் மகனின் பிறந்ததினம் நேற்று என்பதனால் யாழ்ப்பாணத்திலேயே பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *