இன்றிரவும் மழை பெய்யும் சாத்தியம் – கடற்றொழிலாளர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை..!Samugammedia

நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதேநேரம், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிக மழை வீழ்ச்சியில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *