ஜனாதிபதி தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கி பயணிக்கின்றார் – ஒருபோதும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – கஜேந்திரகுமார் எம்.பி காட்டம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி, தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து அடுத்த தேர்தலின் வெற்றியைநோக்கி காய் நகர்த்தி வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த காரணத்திற்காக தான் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *