பண்டிகை காலத்தில் மின்தடை? அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு…!samugammedia

எதிர்வரும் வாரத்தில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை உறுதி செய்யுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு அவர் அறிவித்துள்ளார்.

பராமரிப்பு நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்ட மின் தடைகள் குறித்து சர்வதேச அளவுகோல்களுக்கு ஏற்ப மின்சார வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மின்சார விநியோகம் அடிக்கடி இடைநிறுத்தப்படுவதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை மீளாய்வு செய்த அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வார இறுதி நாட்களில் பராமரிப்புப் பணிகளுக்காக தேவையற்ற திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளும் அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகிறது.

மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக மின்சார சபை பெருமளவு பணத்தை செலவிடும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *