திருவெம்பாவை விரதத்தினை முன்னிட்டு இடம்பெற்றுள்ள பாத யாத்திரை…!samugammedia

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையினால் முன்னெடுக்கபடும் வருடாந்த  பாத யாத்திரை  இவ்வருடமும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் நோக்கி ஆன்மீக எழுச்சியாக இன்று இடம்பெற்றது.

குறித்த பாத யாத்திரையானது கடந்த 11 வருடங்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம்   மாதகல் சம்பில்தறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை ஆரம்பமான பாதயாத்திரை பல ஆலயங்களையும் தரிசித்த வண்ணம்  சிவநாமங்களை உச்சரித்த வண்ணம் பொன்னாலை சந்தியினை சென்றடைந்தது .

வருடா வருடம் பாதயாத்திரையை முன்னிட்டு பொன்னாலை நாராயணன் தாகசாந்தி நிலையத்தினால் சிவனடியார்களுக்கான  அன்னதானம் வழங்கப்பட்டது. 

தொடர்ச்சியாக காரைநகர் ஆலயங்களை தரிசித்த வண்ணம் காரைநகர்  ஈழத்து சிதம்பரத்தை மாலை சென்றடைந்து அடியார்கள் திருவெம்பாவை பூஜையில் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரை இடம்பெற்ற வழித்தடத்தில் பொதுமக்கள் பூரண கும்பம் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்பொழுது அகில இலங்கை சைவ மகா சபையினர்,சிவ தொண்டர்கள் ,சிவ மங்கையர்கள் சிவனடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *