தலைசுற்ற வைக்கும் இஞ்சி விலை…! மக்கள் விசனம்…!samugammedia

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக பச்சைமிளகாய், வெங்காயம்,தக்காளி, உள்ளிட்ட மரக்கறிகள் பன்மடங்கு அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், இஞ்சியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அதாவது ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை இரண்டாயிரம் ரூபாவிற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இஞ்சியின் விலை அதிகரிப்பு காரணமாக உணவகம்இ தேநீர் கடைகளில் இஞ்சியின் பயன்பாட்டு குறைக்கப்பட்டு வருகின்றது.

இஞ்சிக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில்,இஞ்சியின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply