யாழில் மாட்டின் தலையுடன் சிக்கிய இளைஞன்..! மேலும் பலருக்கு பொலிஸார் வலைவீச்சு

 

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மாட்டின் தலையுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

கீரிமலை பகுதியில் மாடொன்றை சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்குவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. 

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, 

சம்பவ இடத்தில் மாட்டின் தலையுடன் நின்ற இளைஞனை கைது செய்தனர்.  

கைதுசெய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து, வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார்,

மாட்டிறைச்சியுடன் தப்பிச் சென்ற ஏனைய நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *