டயானா பாராளுமன்றத்தில் அமர தகுதியற்றவர்..! மனுவை விசாரணை செய்ய அனுமதி

  

இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே இலங்கை பாராளுமன்றத்தில் அமர தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது.

எனினும், அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (19) அனுமதி அளித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *