வளிமண்டலத்தில் திடீர் மாற்றம் – வானிலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு..!samugammedia

நாட்டில் பல பிரதேசங்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை இன்றைய தினம் முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்மழைக்கான வாய்ப்பு உள்ள போதிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற காலநிலை நிலவும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *