பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கையில் 871 சந்தேக நபர்கள் கைது…!samugammedia

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட  பொலிஸாரின் யுக்திய  நடவடிக்கையில் 871 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 626 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 245 சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் 871 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 231 கிராம் ஹெராயின், 129 கிராம் பனி , 26 கிலோ 400 கிராம் கஞ்சா ,  89, 165 கஞ்சா செடிகள், மாவா 863 கிராம், மதனமோதக 248கிராம், 222 மாத்திரைகள்  என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 626 சந்தேக நபர்களில் 09 சந்தேகநபர்கள் தடுப்புக் கட்டளையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 05 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவினருக்குக் குறிப்பிடப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 245 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 10 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான 226 திறந்த பிடியாணைகளும் உள்ளனர்.

கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 02 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 07 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *