சுதந்திர தின நிகழ்வு – விசேட போக்குவரத்து திட்டம்..!samugammedia

இலங்கையின் சுதந்திர தினமானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், விசேட போக்குவரத்து  திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் மற்றும் செராமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான போக்குவரத்துக்காக மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜனவரி 29 முதல் பிப்ரவரி 02 வரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் குறித்த வீதி மூடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெப்ரவரி 03 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி தொடக்கம் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வு முடியும் வரை இந்த வீதி மீண்டும் மூடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *