இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையின் செயல்..! இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது

 

சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்து பெலியத்தை பகுதியில் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஷ் போதைபொருள் தயாரிப்பதற்காக இவர் குறித்த கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 5 அடி உயரமுடைய கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *