பொலிஸாரின் 'யுக்திய'நடவடிக்கையில் 836 சந்தேக நபர்கள் கைது…! samugammedia

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ விசேட சோதனை நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 836 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 579 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 257 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 836 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 142 கிராம் ஹெராயின், 95 கிராம் பனி, கஞ்சா 01 கிலோ 400 கிராம், 826,847 கஞ்சா செடிகள், சாம்பல் 105 கிராம், மாவா 93 கிராம் 1,650 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 579 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்விற்காக  பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 18 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 257 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 26 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 219 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.

கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 09 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *