தேசிய ரீதியில் வீர வீராங்கணைகள் கௌரவிப்பு

தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில், இளைஞர் யுவதிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பின்னர் தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பசிந்து குணவர்தன, யாழ்ப்பாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர்கள், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், இளைஞர் ,யுவதிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *