
இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக நேற்று புதன்கிழமை வரை 2630 பேரே விண்ணப்பித்துள்ளார்கள். இவ்வருட ஹஜ் விசா எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சினால் விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன் ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.