வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் சுதந்திர தின நிகழ்வு – சில வீதிகளும் பூட்டு..!

வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில்  இரண்டு வீதிகள் சில மணிநேரங்கள் மூடப்பட்டிருந்தன.

சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலர்  பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன்,

 பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வினையடுத்து  நகரசபை வீதி , நூலக வீதி ஆகியன காலை 8.30 மணி தொடக்கம் காலை 10.00 மணிவரையிலான காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *