இளம் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் – தமிழர் பகுதியில் கொடூரம்..!

திருகோணமலை – மூதூர் தோப்பூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொலைசெய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மனைவியின் ஆடையின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த 33 வயதுடைய  கணவன் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *