முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான வீட்டு மின்சார பயிற்சி…..!

யாழ்  மாவட்டத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான 60 மணிநேர  பகுதி நேர வேலைக்கான  வீட்டு மின்சார இணைப்பு பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை  கைதடி தொழிற் பயிற்சி மையத்தில் இடம்பெற்றது.

இதில் யாழ்மவாட்ட பல பிரதேச செயலகத்தின் ஊடாக பதிவு செய்த ஆட்டோ சாரதிகள் கலந்து கொண்டனர்.

இதில் பிரதம  விருந்தினராக  யாழ்ப்பாண கிளிநொச்சி பிராந்திய உதவி பணிப்பாளர் குகநாதன் நிரஞ்சன் கலந்து கொண்ட இந்நிகழ்வில்  20 மேற்பட்ட பயிலுனர்கள் கலந்துகொண்டனர். 

இதே வேளை மேலதிகமாக கலந்து கொள்ளவிரும்புவோர் உடனடியாக விதாத அலுவலர்கள் ஊடாகவோ, அல்லது  பிரதேச செயலகத்தின் ஊடாக பெயர்களை பதிவு செய்து எதிர் வரும் சனிக்கிழமை காலை 9 மணி பயிற்சி  வகுப்பில் கலந்து கொள்ளமுடியும் என்று பணிப்பாளர் தெரிவித்டடன் 

பல பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் பதிவு செய்து தொழிற்பயிற்சி ஒன்றை பெற்று வெளிநாட்டு வேலைக்கான  வீசா பெற்று குறைந்த செலவில் வெளிநாட்டு வேலை பெற முடியும் என்றும், அதிக இலாபத்தில்.வேலைகளை செய்ய முடியும் என்று கூறினார். 

பயிற்சியாளரின் பங்களிப்புடன் 10000 ரூபா பெறுமதியான உபகரங்களும் வழங்கப்பட உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *