யாழில் உழவு இயந்திரத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று காலை, கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணம் செய்துகொண்டிருந்த உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக வந்த தனியார் பேருந்து ஒன்று உழவு இயந்திரத்தை மோதித் தள்ளி விபத்துக்குள்ளாகியது.
இதன்போது காயமடைந்த இரண்டு வாகனங்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.