பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு..! முல்லைத்தீவில் துயரம்..!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் (12) தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார்.

18 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தவறான முடிவெடுத்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

தூக்கிட்ட நிலையில் இருந்த சிறுமியை மீட்ட அயலவர்கள் புதுக்குடியிருப்பு ​வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மாணவி  உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *