சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த நபர் கைது..!!

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறுகல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு இடியன் துப்பாக்கிகளும் மற்றும் மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்கு குழாய்கள் 03  கட்டுத் துவக்குக்கு பயன்படுத்தப்படும் கம்பி மற்றும் ஈயக்குண்டுகள் 12 யானை வெடி 3 வெடிமருந்து என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக  14.02.2024 சுற்றிவளைப்பை மேற்கொண்ட தர்மபுரம் போலீசார்  சந்தேகநபரைகைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய தினம் 15.02.2024  கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாதருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிடி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply