பிளமிங்கோ என அழைக்கப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் கடற்கரைப் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன.
இந்நிலையில், குறித்த பகுதிகளை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்த பறவைகளின் அழகை இரசிப்பதுடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்வதாக தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை, அண்மைக் காலங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டு பறவை இனங்கள் படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











