யாழிலுள்ள வைத்தியசாலையினுள் புகுந்த விஷமிகள் – பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

 

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் நேற்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலைக்கு நேற்று  (15) மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர்.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். 

இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டினர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில்,

பொலிசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply