கொழும்பில் சி.சி.டி.வியில் சிக்கிய 793 பேர்..! எடுக்கப்பட்ட நடவடிக்கை

கடந்த 15 நாட்களில்  கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறிய 793 பேர் சிசிடிவி காணொளி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட விதி மீறல்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பாக சுமார் 26,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *