'யுக்திய' சோதனையில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!samugammedia

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட ‘யுக்திய’  நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விசாரணைக்காக வாகனங்களை மேலும் தடுத்து வைக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்ததோடு ஏறக்குறைய ஒரு கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது, மேற்படி சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் முறையான உத்தரவுகள் பெறப்படவில்லை எனவும் பாதுகாப்பு கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply