இலங்கை கடற்பகுதியை பாதுகாப்பதற்காக விசேட விமானமொன்றை வழங்க போவதாக அமெரிக்கா அறிவிப்பு..!

இலங்கை கடற்பகுதியினை பாதுகாப்பதற்காக விமானமொன்றை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அமெரிக்க இராஜதந்திரியான டோலண்ட் லு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இலங்கைக்கு ‘கிங் ஏர்’ விமானமொன்று வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கிங் ஏர் விமானமானது, இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா ஏற்கனவே படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *