யாழில் பொலிஸ் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் அதிரடி…! மீட்கப்பட்ட முக்கிய பொருள்…!samugammedia

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றையதினம்(18) இரண்டு கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டதுடன் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply