தர்மபுரம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை…! முக்கிய பொருளுடன் சிக்கிய பெண்…!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  உழவனூர் பகுதியில் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்றையதினம்(27) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

165மில்லிகிராம் ஐஸ் மற்றும் 3900 மில்லி கிராம் ஹெரோயின் என்பன விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணை  இன்றையதினம்(28)  கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply