நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுமி..! ஆபத்தான நிலையில் தாய் மற்றும் சகோதரி!

 

எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் நேற்று (03) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த சிறுமி தனது தாய் மற்றும் சகோதரியுடன்  எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது அவர்கள் மூவரும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனேகொட, கெபத பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.

அவரது தாயும் சகோதரியும் தற்போது ஆபத்தான நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *