ஜேவிபிக்கு எதிராக ரணில் பயன்படுத்தவுள்ள மூன்று தந்திரோபாயங்கள்! அனுர பகிரங்கம்

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக மூன்று விளம்பர உத்திகளை பயன்படுத்தவுள்ளதாக   தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி விளம்பர நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது.

1983ம் ஆண்டு வன்முறைகள் 1988-89 ஆண்டு வன்முறைகள் மற்றும் 2022 மே 9ம் திகதி சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஜேவிபியை இலக்குவைக்கவேண்டும் என இந்த  விளம்பர நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புபட்ட நபர் ஒருவரிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கடந்த கால சம்பவங்களை நினைவுபடுத்துவதன் மூலம் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி முயல்கின்றார் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *