ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது ஒரே சட்டம் என்கின்றார் சரத் வீரசேகர!

இலங்கை போன்ற ஒற்றையாட்சி நாட்டிற்கு அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கட்டமைப்பு பொருந்தும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு இருப்பின் இனங்கள் மற்ற சமூகங்களிடையே கருத்து வேறுபாடு, விரக்தி மற்றும் பகைமையை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *