உயர்தர மாணவர்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பு, பெப்.22

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் அனைத்து பரீட்சைகளையும் நிறைவு செய்த மாணவர்கள், தமக்கான இரண்டாவது கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுக்கின்றது.

இந்த கோரிக்கையை, சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே கூறியதாவது,

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், 12 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட 745,000 மாணவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், 16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட 1.1 மில்லியன் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சையின், அனைத்து விடயதானங்களுக்குமான பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்கள், தமக்கான இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *