வீதிக்கு இறங்கிய மோப்ப நாய்கள்…! இடைநடுவில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்…! முல்லைத்தீவில் நடந்தது என்ன?

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் எண்ணக்கருவிற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  பொலிஸாரினால் ‘யுக்திய’ எனும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினர் மோப்ப நாயின் உதவியுடன் இன்றைய தினம்(13)  வீதிகளில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் மறிக்கப்பட்டதுடன் பொலிஸார்  மற்றும் விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த வாகனங்களை  தொடர்ந்து பயணிப்பதற்கு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *