இன்று அதிகாலை எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 19 பேர் அதிரடி கைது..!samugammedia

யாழ்ப்பாணம் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் இரு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளையே  அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஒரு படகில் 12 மீனவர்களும், மற்றைய படகில் 7 மீனவர்களும் எல்லை தாண்டிய வேளை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் இன்று கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில்  முற்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *