அதிகரித்து வரும் வெப்பநிலை – வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை..!!

தீவின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை கவனத்திற்குரிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய  வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய அளவில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் போதியளவு தண்ணீர் அருந்துதல், முடிந்த  வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பது, வெளியில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *