இளம் ஆசிரியை கொடூரமாக கொலை – சந்தேக நபர் எடுத்த விபரீத முடிவு

மாத்தறையில் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை சம்பவம் மாத்தறை – ஊருபொக்க, டொலமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 26 வயதுடைய ஆசிரியை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலையைச் செய்த சந்தேக நபர் உயிர்மாய்க்க முயற்சித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *