தவறான உறவால் பிறந்த குழந்தை கொலை…! பெண்ணொருவர் கைது..! முல்லைத்தீவில் கொடூரம்…!

முல்லைத்தீவு  பகுதியில் தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்பமடைந்துள்ளார். 

இந்நிலையில், குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அப் பிள்ளையை கொலை செய்துள்ளார்

இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம் புதுக்குடியிருப்பு  பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *