யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் வந்த வினை – எரிந்து நாசமான கடை

 

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீவிபத்து இன்று  காலை ஏற்பட்டுள்ளது. 

வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ அருகில் உள்ள சிறிய கடையொன்றிற்கு பரவியுள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் தீ விபத்தில் குறித்த கடை முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *